மிகப்பெரும் இடைவேளைக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி
இன்று பகிரப்போகும் பதிவு நம் தஞ்சை நுழைவாயல் பற்றி
நானும் தஞ்சைக்கு அடுத்த அடி இன்னொரு கோவிலை பற்றி செய்தி பகிர விரும்புகிறேன் ஆனால் எனக்கு முடிவு என்பது இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் எனக்கு அறிவுத்துகிறது தஞ்சை என்னும் வியக்கவைக்கும் அதிசயம் .
இடைக்கால சோழர்களால் உருவாக்கப்பட்ட கோவில்களில் முதலிடம் தஞ்சைக்கு தான் கொடுக்கின்றனர் ஆய்வாளர்கள் .தஞ்சை கோபுர நுழைவாயில்களை ஆராயும்போது அதில் அதற்கு முன் எந்த வாயில்களிலும் இல்லாத புதுமைகள் உள்ளன .
முதல் கோபுரம் கேரளாந்தகன் திருவாயில் இந்த கோபுரத்தில் கீீழ்நிலையில்
சிற்பங்கள் இடம் பெறவில்லை என்றாலும் முதற்தளத்தில் வடக்கு மற்றும் தென் புறத்தில் தட்சிணாமூர்த்தி ,பிரம்மன் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளது .
இதில் என்ன புதுமை என்று கேட்கின்றீர் அனைத்து கோவில்களில் உள்ளது போல் தட்சிணாமூர்த்தி உருவம் அமைந்துள்ளது ஆனால் பிரம்மன் உருவ அமைப்பு மாறுபட்டு உள்ளது .
குடையின் கீழ் சடா மகுடராய் தாடி,மீசை உடன் நான்கு தலைகளுடன் ஒரு காலை மடித்தும் மறுகாலை தொங்கவிட்ட நிலையிலும் உள்ளார் வலது மேற்கரத்தில் இஸ்ருவம்,இஸ்ருக் எனும் வேள்விக் கரண்டிகளும் ,கீழ் புறத்தில் அக்க மாலையும் ,இடது புறத்தில் மேற்கரத்தில் ஜலகெண்டியும் ,கீீழ்கரம் சுவடிபிடித்த நிலையில் உள்ளார் .
இதுல என்னம்மா இருக்கு அப்படின்னு கேட்கின்றிரோ முற்கால ,பிற்கால சோழர் கோவில்களில் உள்ள பிரம்மன் தாடி ,மீசை இல்லாமலும் கையில் வேள்வி கரண்டிகள் இல்லாமலும் காட்சி அளிக்கின்றனர் .
இது தான் புதுமை இராஜரஜனை தொடர்ந்து இராஜேந்திர சோழன் அமைத்த கங்கை கொண்ட சோளீசுரம் கோவிலிலும் இரு தேவியர் சாவித்திரி ,சரஸ்வதி பக்கம் நின்ற கோலத்தில் வேள்விக் கரண்டியும் ,தர்ப்பை புல்லும் உடையவராய் ,தாடி ,மீசை உடன் உள்ளார் .
முற்கால ,பிற்கால சோழர் சிற்ப மரபில் காணப்படாத இப்புது வடிவம் தஞ்சை கோபுரத்தில் எவ்வாறு இடம் பெற்றது என்ற கேள்விக்கு பதிலாக ஆராய்ச்சியாளர்கள் விளக்குவது இக்கலை மரபு சோழர்களின் குருமார்களாக இருந்த லகுளீசபாசுபத மர்கத்தினரால் அறிமுகமான ஒரு மரபு .
சர்வசிவ பண்டிதர் ,ஈஸ்வர சிவபண்டிதர் போன்ற ராஜாகுருமார்கள் ஆர்யதேசம் ,கௌடதேசம் போன்ற வடதேசம் இருந்து வந்தவர்கள் .இச்செய்தி தஞ்சை கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது .
வடஇந்திய பகுதிகளில் மத்தியகால சிற்பங்களில் பிரமன் வயோதிகராகவும் ,வேல்விக்குரியவராகவும் ,தாடி ,மீசை உடன் காணப்படுகிறது.
மற்றவர் மரபையும் தன் மரபு போல் ஏற்று அதை தான் நிறுவிய கோவிலின் முதல் நுழைவாயிலில் அதை பதிவிட்டு தன் தலைமுறைக்கும் மற்றவர் மரபை மதித்து நடக்க கற்றுகொடுதவன் நம் இராஜராஜ சோழன் என்பதில் சந்தேகமில்லை .
அடுத்த வாயிலில் உள்ள புராண கதைகளுடன் அடுத்த பதிவில்
ச(சி)ந்திப்போம் ....
இன்று பகிரப்போகும் பதிவு நம் தஞ்சை நுழைவாயல் பற்றி
நானும் தஞ்சைக்கு அடுத்த அடி இன்னொரு கோவிலை பற்றி செய்தி பகிர விரும்புகிறேன் ஆனால் எனக்கு முடிவு என்பது இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் எனக்கு அறிவுத்துகிறது தஞ்சை என்னும் வியக்கவைக்கும் அதிசயம் .
முதல் கோபுரம் கேரளாந்தகன் திருவாயில் இந்த கோபுரத்தில் கீீழ்நிலையில்
சிற்பங்கள் இடம் பெறவில்லை என்றாலும் முதற்தளத்தில் வடக்கு மற்றும் தென் புறத்தில் தட்சிணாமூர்த்தி ,பிரம்மன் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளது .
இதில் என்ன புதுமை என்று கேட்கின்றீர் அனைத்து கோவில்களில் உள்ளது போல் தட்சிணாமூர்த்தி உருவம் அமைந்துள்ளது ஆனால் பிரம்மன் உருவ அமைப்பு மாறுபட்டு உள்ளது .
குடையின் கீழ் சடா மகுடராய் தாடி,மீசை உடன் நான்கு தலைகளுடன் ஒரு காலை மடித்தும் மறுகாலை தொங்கவிட்ட நிலையிலும் உள்ளார் வலது மேற்கரத்தில் இஸ்ருவம்,இஸ்ருக் எனும் வேள்விக் கரண்டிகளும் ,கீழ் புறத்தில் அக்க மாலையும் ,இடது புறத்தில் மேற்கரத்தில் ஜலகெண்டியும் ,கீீழ்கரம் சுவடிபிடித்த நிலையில் உள்ளார் .
இதுல என்னம்மா இருக்கு அப்படின்னு கேட்கின்றிரோ முற்கால ,பிற்கால சோழர் கோவில்களில் உள்ள பிரம்மன் தாடி ,மீசை இல்லாமலும் கையில் வேள்வி கரண்டிகள் இல்லாமலும் காட்சி அளிக்கின்றனர் .
இது தான் புதுமை இராஜரஜனை தொடர்ந்து இராஜேந்திர சோழன் அமைத்த கங்கை கொண்ட சோளீசுரம் கோவிலிலும் இரு தேவியர் சாவித்திரி ,சரஸ்வதி பக்கம் நின்ற கோலத்தில் வேள்விக் கரண்டியும் ,தர்ப்பை புல்லும் உடையவராய் ,தாடி ,மீசை உடன் உள்ளார் .
முற்கால ,பிற்கால சோழர் சிற்ப மரபில் காணப்படாத இப்புது வடிவம் தஞ்சை கோபுரத்தில் எவ்வாறு இடம் பெற்றது என்ற கேள்விக்கு பதிலாக ஆராய்ச்சியாளர்கள் விளக்குவது இக்கலை மரபு சோழர்களின் குருமார்களாக இருந்த லகுளீசபாசுபத மர்கத்தினரால் அறிமுகமான ஒரு மரபு .
சர்வசிவ பண்டிதர் ,ஈஸ்வர சிவபண்டிதர் போன்ற ராஜாகுருமார்கள் ஆர்யதேசம் ,கௌடதேசம் போன்ற வடதேசம் இருந்து வந்தவர்கள் .இச்செய்தி தஞ்சை கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது .
வடஇந்திய பகுதிகளில் மத்தியகால சிற்பங்களில் பிரமன் வயோதிகராகவும் ,வேல்விக்குரியவராகவும் ,தாடி ,மீசை உடன் காணப்படுகிறது.
மற்றவர் மரபையும் தன் மரபு போல் ஏற்று அதை தான் நிறுவிய கோவிலின் முதல் நுழைவாயிலில் அதை பதிவிட்டு தன் தலைமுறைக்கும் மற்றவர் மரபை மதித்து நடக்க கற்றுகொடுதவன் நம் இராஜராஜ சோழன் என்பதில் சந்தேகமில்லை .
அடுத்த வாயிலில் உள்ள புராண கதைகளுடன் அடுத்த பதிவில்
ச(சி)ந்திப்போம் ....






