வெள்ளி, 8 ஏப்ரல், 2016

தஞ்சை அரண்மனை


தற்போது தஞ்சையில் அழகு கொஞ்சும்  அரண்மனையின் பெரும்பகுதி நாயக்கர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அரண்மனை செவ்வப்ப நாயக்கரால் துவங்கப்பட்டு இரகுநாத நாயக்கர் மற்றும் விசயராகவா நாயக்கர்கள் கைவண்ணத்தில் முடிக்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன .

இரகுனாதர் காலத்தில் " விசய விசாலம் என்றும் இரகுநாத விலாசம்" என்றும்  விசயராகவன் காலத்தில் " விசயராகவா விலாசம் "என்றும் அரண்மனை அழைக்கப்பட்டதாம்.

அன்று தஞ்சையை அலங்கரித்த சோழர் கால அரண்மனை பற்றிய சரியான தகவல்கள் கல்வெட்டுகள் ,செப்பேடுகள் ஏதும் கிடைக்கவில்லை என்று அறியப்படுகிறது .

ஆனால் இவற்றையும் தாண்டி நம் புலவர்களின் பாடல்கள் சான்றாக நிற்கின்றது .

கருவூறார் பாடலில் 

"இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை " என்றும் 

அருணகிரியார் பாடிய பாடலில் 

" பொன் மாளிகைத் தஞ்சை மாநகர் " என்றும் 

அவர்கள் பாடல் வழியாக தஞ்சையில் மாட மாளிகைகள் அலங்கரிக்கப்பட்டது என்று தெளிவாகிறது மேலும் சாகித்ய ரத்நகரம் ,ரகுநாத நாயக்கப் யூதயமு ,மன்னாருதாச விலாசம் போன்ற நூல்களிலும் அரண்மனைப்பற்றி கூறப்பட்டுள்ளது  .

மேலும் தற்போது உள்ள அரண்மனை மராட்டியர் காலத்தில் அவர்களின் கட்டிடகலையின்படி நுணுக்கமான கலைவன்ணங்கள் இடம் பெற்றுள்ளதாம் . இந்த அரண்மனை சுமார் 400 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டதாக கூறப்பட்டதாலும் இதில் 75% அழிந்துவிட்டதாம் 

 தஞ்சை அரண்மனை வளாகம் 110 ஏக்கரில் அமைந்துள்ளது .
இவ்வளாகம் முக்கியமாக நான்கு கட்டிடங்களை தாங்கி உள்ளது.

அவை : மணிமண்டபம் 
                 ஆயுத சேமிப்பு  மாளிகை
                  தர்பார் மண்டபம்  
                  நீதிமன்றம்


மணிமண்டபம் 

 மணிமண்டபம் 11 மாடிகள் கொண்டதாகும் ஆனால் தற்பொழுது 7 மாடிகள் 34.8 மீட்டர்  மட்டுமே உள்ளது .இது மேலும் .
ஒவ்வொரு தளத்திலும் 4 புறமும் வளைந்த சாளரங்கள் காணப்படுகிறது ஆதலால் ,மக்கள் இந்த மண்டபத்தை தொள்ளக்காது மண்டபம் 
என்றும் அழைக்கப்படுகிறது. 
இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாக பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது .


ஆயுத சேமிப்பு மாளிகை 

ஆயுத மாளிகை கோபுர வடிவில் உள்ளது இதில் அமைந்துள்ள படிகள் மிகவும் சிக்கலான அமைப்புடன் காணப்படுகிறது .




தர்பார் மண்டபம் 

தஞ்சையை ஆட்சி செய்யும் அரசர்கள் அமர்ந்து ஆட்சிபுரியும் மண்டபம் தர்பார் மண்டபமாகும் .பல வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்கள் இந்த மண்டபத்தை அலங்கரிக்கின்றன .இந்த மண்டபம் முன் ஒரு மைதானமும் அமைந்துள்ளது .


 
 நீதிமன்றம்

இந்த மண்டபம் மேலும் ஜார்ஜவா மாளிகை என்றும் ,சதர் மாளிகை என்றும் அழைக்கப்படுகிறது .சதர் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் நீதிமன்றம் என்று பொருள் ஆகும் .இந்த மண்டபம் 7 மாடிகள் இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் இப்பொழுது 5 மாடிகள் மட்டுமே உள்ளது .



 

1 கருத்து: