தஞ்சை குறைவில்லாத புதையலின் தேசம்
அளவில்லாத அழகின் இருப்பிடமான தஞ்சை பெரிய கோவிலின் அளவுகோல் பற்றி இன்று தெரிந்துகொள்வோம் .....
தஞ்சை பெயர் காரணத்தில் குறிப்பிட்டது போல தஞ்சை என்றால் "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி ". நெல்மகள் நடனமாடிய தஞ்சையில் அவளையே அளவுகோளாக வைத்து கட்டியது தான் நம் தஞ்சை பிரகதீஸ்வரர்(பெரிய) கோவில் .
விரல் என்னும் அளவுகோல் தான் பயன்படுத்த பட்டுள்ளது .
விரல் அப்படி என்றால் ?
ஒரு விரல் என்பது 8 நெல் கதிரை அகல வாட்டில் வைத்தால் கிடைக்கும் அளவு அதாவது 33 மில்லி மீட்டர் ( 33 mm ) .
பத்து விரல்கள் சேர்ந்த அளவு அலகு என்று அழைக்கப்பட்டுள்ளது .
௦.33 மீட்டர் (௦.33 m) .
இருபத்துநான்கு விரல்கள் சேர்ந்த அளவு முழம் என்று அழைக்கப்பட்டுள்ளது .
கோவிலின் அளவுகள் :
பல நூல்களில் பல முரண்பட்ட அளவுகள் குறிப்பிட பட்டுள்ளது அவை 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை தஞ்சை விமானத்தின் அளவை குறிப்பிடுகின்றன .
ஆனால் அவர்கள் பயன்படுத்திய அளவுகோலின் படி பார்க்கையில்
விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள் ஆக இருந்திருக்க வேண்டும் . அப்படியெனில் 59.40 மீட்டர் .
இதன்படி சிவலிங்கத்தின் உயரம் 12 அலகுகள் .அதாவது சரியாக சிவலிங்கத்தை விட விமானம் 15 மடங்கு உயரம் என நிர்ணயிக்கப் பட்டிருக்க வேண்டும் .
இந்த அளவுகோல்கள் நம் தஞ்சையின் அளவை மட்டும் அல்ல நம் தமிழகத்தின் செழுமை அப்பொழுது எந்த அளவு இருந்திருக்கிறது என்பதையும் தெளிவாகிறது .
அளவில்லாத அழகின் இருப்பிடமான தஞ்சை பெரிய கோவிலின் அளவுகோல் பற்றி இன்று தெரிந்துகொள்வோம் .....
விரல் என்னும் அளவுகோல் தான் பயன்படுத்த பட்டுள்ளது .
விரல் அப்படி என்றால் ?
ஒரு விரல் என்பது 8 நெல் கதிரை அகல வாட்டில் வைத்தால் கிடைக்கும் அளவு அதாவது 33 மில்லி மீட்டர் ( 33 mm ) .
பத்து விரல்கள் சேர்ந்த அளவு அலகு என்று அழைக்கப்பட்டுள்ளது .
௦.33 மீட்டர் (௦.33 m) .
இருபத்துநான்கு விரல்கள் சேர்ந்த அளவு முழம் என்று அழைக்கப்பட்டுள்ளது .
கோவிலின் அளவுகள் :
பல நூல்களில் பல முரண்பட்ட அளவுகள் குறிப்பிட பட்டுள்ளது அவை 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை தஞ்சை விமானத்தின் அளவை குறிப்பிடுகின்றன .
ஆனால் அவர்கள் பயன்படுத்திய அளவுகோலின் படி பார்க்கையில்
விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள் ஆக இருந்திருக்க வேண்டும் . அப்படியெனில் 59.40 மீட்டர் .
இதன்படி சிவலிங்கத்தின் உயரம் 12 அலகுகள் .அதாவது சரியாக சிவலிங்கத்தை விட விமானம் 15 மடங்கு உயரம் என நிர்ணயிக்கப் பட்டிருக்க வேண்டும் .
மேலும் நம் தஞ்சை பெரியகோவில் கருவறையின் இரு தளங்கள் ,விமானத்தின் 13 தளங்கள் சேர்த்து மொத்தம் 15 தளங்கள் கொண்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
கருவறையின் வெளிச்சுவர் தூண்களின் அகலம் 10 விரல்கள் அதாவது
1 அலகு ஆகும் . இதன் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட சதுரமாகும் .
மேலும் கருவறையின் உட்சுவர் 48 அலகுகளும் ,வெளிச்சுவர் 72 அலகுகளும் கொண்ட சதுரமாகும் .
விமானத்தின் அடிப்பகுதி ( உபானா ) 90 அலகுகள் .
இதன் அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 m) கொண்ட சதுரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது . ஆனால் உறுதிசெய்யப்படவில்லை .














