வியாழன், 16 ஏப்ரல், 2015

தேடலின் முதல் அடி தஞ்சையை நோக்கி ......

தமிழனின் வரலாறு புதைந்து போனது என்பதை விட புதைக்க பட்டது என்று சொல்லும் நேரத்தில் ,நம் தமிழனின் புதைந்துபோன வரலாற்றை மறுபடியும் முடிந்த வரை வெளியில் கொண்டு வரும் எனது சிறு முயற்சி .....

               

                          1. தஞ்சை 


அ) பெயர் காரணங்கள் :


தஞ்சை எட்டாம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகரமாகும் .அப்போது இப்பகுதியை ஆண்ட "தனஞ்சய முத்தரையரின் " பெயரையே இந் நகரம் பெயராக பெற்றது என்றும் தனஞ்சய ஊர் என்பது மருவி தற்போது தஞ்சாவூர் என்று அழைகப்படுவதாக கூறப்படுகிறது.


இது மட்டும் இல்லாமல் பல காரணங்கள் சொல்லபடுகின்றன ,
தஞ்சை வயல் நிறைந்த பசுமையான பகுதி என்பதால் அதனை குறிக்கும் வகையில் இப் பெயர் பெற்றிருக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது .தஞ்சையின் பொருள் குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி " . 


நம் தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் என்னும் பழமொழியை 
உறுதி செய்யும் வகையில் நல்லாட்சி புரிந்து ,தஞ்சம் அடைதவற்கு 
அரணாக இருந்த ஆட்சியை வழங்கிய ஊரை  குறிக்கும் வகையிலும்
இப் பெயர் வைத்திருக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது .
தஞ்சை பொருள் " தஞ்சம் அடைந்தவர்களுக்கு  அரணாக விளங்குவது ".


புராணக்கதைகள்  மூலமாகவே அறிவியலும் , மருத்துவத்தையும்  
சொன்ன தமிழன் தஞ்சையையும் விட்டுவைக்கவில்லை என்றே 
சொல்ல முடியும் .முற்காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் 
இவ்விடத்தில்  மக்களைத் துன்புறுத்தி வந்ததாகவும்  அவர்களை 
காக்க அவ்வரக்கனை சிவன் வதம் செய்தார் என்றும் அதை 
நினைவு படுத்தும் வகையிலே இங்கு சிவன் தஞ்சபுரீசுவரர் என்னும் 
பெயரில் கோவில் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக