வியாழன், 23 ஏப்ரல், 2015

நம் தமிழனின் வியக்கும் தொழில்நுட்பங்கள்

இன்றைய தொழில்நுட்பங்கள் தொடாத தூரத்தை ஆயிரம் ஆண்டுகள் முன் நம் தமிழர்கள் தொட்டுவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும் .


தஞ்சையில் உள்ள வியக்கும் அதிசயங்களில் நம் கண்ணில் இருந்து மறையும் ஒன்று .....

கோவிலின் கோபுரத்தையும் ,விமானத்தையும் அதிசயத்து பார்க்கும் அந்த நேரத்தில் இந்த வியக்கும் வேலைப்பாடு நம் கண்களில் இருந்து  மறைவதில் வியப்பு இல்லை .






















மேலும் நெருங்கி செல்வோம் இந்த வேலைப்பாட்டின் ஆழத்தை அறிய .இந்த படத்தைக் காணும் போது பூக்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது . 
ஆனால் இந்த அமைப்பினும் இருக்கும் நுண்ணிய வேலைப்பாடுகள் நம் கண்களுக்கு புலப்படுவது கடினமே. இந்த வேலைப்பாடு விமானத்தை தாங்கி உள்ள கோபுரத்தின் கிழ்ப் பகுதியில் அமைந்துள்ளது .


 .

வரிசையாக பூக்கள்இணைந்து இருக்கும்படி இந்த வேலைப்பாடுகளின் இடையில், அதாவது  இரண்டு பூக்களின் இதழ்கள் ஒரு புள்ளியில் இணையும் இடத்தில் ஒரு துளை அமைக்கப்பட்டுள்ளது .

இந்த துளைகள் 3மி.மீ கும் குறைவான விட்டம்  மட்டுமே உடையது .
இந்த துளைகளின் உள் நாம் சிறு இலையின் காம்பை மட்டுமே செலுத்த முடிகிறது .அதனுள் ஏன் நம் எழுதுகோல் கூட நுழைக்க முடியாது அவ்வளவு நுணுக்கமானது .




இந்த துளைகளில் பொதிந்துள்ள ஆச்சரியம் யாதெனில் . நம் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டுள்ளது ,உலகில் கடினமான பொருள்களுள் ஒன்றாக கருதப்படும் சிவப்பு  கிரானைட்  டினால்(red granite ) ஆனது .

மேலும் இவைகளில் துளையிடுவது மிகவும் கடினமான ஒன்று . இன்றைய தொழில்நுட்பத்தில் இவ்வகை நுண்ணிய துளைகள் அமைக்க வைர முனையை பயன்படுத்துகின்றனர் ( diamond tip drilling technique ).







மேலும் இதனுள் அமைந்துள்ள மற்றொரு வியப்பு இந்த துளைகள் நேரானவை அல்ல ( not a  straight drilling ) இவை குறிப்பிட்ட கோணத்தில் அமைந்துள்ளது என்பதை நாம் மேல் குறிப்பிட்டுள்ள புகைப்படத்தின் மூலமாக அறியலாம் .
.


அதாவது செங்கோணமாக அமைந்துள்ளது (90 degree ) இப்படிப்பட்ட மிக நுணுக்கமான துளையிடும் தொழில்நுட்பங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து அதை கண்டறிய முடியாத இடத்தில் ஒளித்து வைத்துள்ளான் நம் தமிழன் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக